- குடியரசு தினம்
- என்.சி.சி முகாம்
- தில்லி
- புது தில்லி
- என்.சி.சி
- தேசிய மாணவர் படையணி
- பொது இயக்குனர்
- லெப்டினன்ட் ஜெனரல்
- குர்பீர்பால் சிங்
- கண்டோன்மென்ட், டெல்லி
புதுடெல்லி: டெல்லி, கன்டோன்மென்ட்டில் நேற்று,செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த என்சிசி(தேசிய மாணவர் படை) இயக்குனர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங்,‘‘ ஒரு மாத கால என்சிசி முகாமில் நாடு முழுவதும் இருந்து 907 மாணவிகள் உட்பட மொத்தம் 2,274 பேர் பங்கேற்றுள்ளனர். டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் நடந்து வரும் முகாமில் ஜம்மு காஷ்மீர், லடாக்கைச் சேர்ந்த 122 பேரும், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 177 பேரும் இடம் பெற்றுள்ளனர். இளைஞர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் 25 நட்பு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்தாண்டு என்சிசி வீரர்களுக்கான பல போட்டிகள் நடக்கிறது. இதில் சிறந்த அணி, சிறந்த வீரர் மற்றும் குதிரையேற்ற போட்டியில் சிறந்து விளங்கும் வீரர் தேர்வு செய்யப்படுவார்கள்’’ என்றார்.
The post டெல்லி, குடியரசு தின என்சிசி முகாமில் 2274 பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.